குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா!

கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்து வைத்தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவிற்கு தலைமை ஏற்றார். 



இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது. 



இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...